TNPSC GK Question and Answer keys (Test-22)

Spread the love

1. தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ மன்றம் யாரை பாராட்டி பட்டம் வழங்கி சிறப்பித்தது?

விடை: தந்தை பெரியார்

2. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்?

விடை: சீவக சிந்தாமணி

Exams Guru examsguru

3. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?

a) இரண்டு 

b) மூன்று 

c) நான்கு 

d) ஐந்து

விடை: மூன்று

4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ______க்கும் மேற்பட்டது.

விடை: 1300

5. இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலையாக நிகழ்கின்றது என்று கூறியவர் யார்?

விடை: சா. அகத்தியலிங்கம்

6. திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர்

விடை: குமாரிலபட்டர்

7. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?

விடை: இருபத்தி எட்டு(28)

8. “தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனி குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழி தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிக்கும் தொடர்பு இருக்கலாம்” இது யாருடைய கூற்று?

விடை: கால்டுவெல்

9. எந்த இரு நாடுகளின் பண தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?

விடை: மொரீஷியஸ், இலங்கை

10. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் எவை?

இலங்கை சிங்கப்பூர்

11. உலகத் தாய்மொழி நாள் என்று கொண்டாடப்படுகிறது?

விடை: பிப்ரவரி 21

12. நவரசம் :  

விடை: வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை.

முதலிய ஒன்பது

13. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று இயற்கையை வாழ்த்திப் பாடியவர் யார்?

விடை:  இளங்கோவடிகள்

14. இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?

விடை:  சர் ஆர்தர் காட்டன்

15. கல்லணைக்கு கிரான்ட் அணைக்கட்டு என்ற பெயரைச் சூட்டியவர் யார்?

விடை:  சர் ஆர்தர் காட்டன்

16. பெரியபுராணத்தை இயற்றியது யார்?

விடை:  சேக்கிழார்

17. “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ” என்று சேக்கிழாரை புகழ்ந்தவர் யார்?

விடை: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

18. நாலடி நானூறு, வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?

விடை: நாலடியார்

19. நெறி என்னும் சொல்லின் பொருள்

விடை:  வழி

20. பகைவரை வெற்றி கொண்டவரை பாடப்பாடும் இலக்கியம்

விடை: பரணி

21. பகுத்தறிவுக் கவிஞர் என்று புகழப்படுபவர் யார்

விடை: உடுமலை நாராயணகவி

22. ஒலியின் வரிவடிவம் ……… ஆகும்

விடை: எழுத்து

23. பேச்சு மொழியை……. வழக்கு என்று  கூறுவர்

விடை: உலக

24. இராவண காவியத்தின் ஆசிரியர் யார்?

விடை: புலவர் குழந்தை

25. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?

விடை: விக்ரம் சாராபாய்

26. இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்?

விடை: டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்

27. இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?

விடை: மயில்சாமி அண்ணாதுரை

28. யார் தமது அறிவியல் அனுபவங்களை “கையருகே நிலா” எனும் நூலாக எழுதியவர் யார்?

விடை: மயில்சாமி அண்ணாதுரை

29. சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் ______ என்று அழைக்கப்பட்டனர்

விடை: கண்ணெழுத்துக்கள்

30. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர் யார்?

விடை: வீரமாமுனிவர்

31. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று?

விடை: தொல்காப்பியர்

32. ஆயுத எழுத்து பிறக்கும் இடம்____?

விடை: தலை

33. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: வாணிதாசன்

34. அரங்கசாமி என்கின்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர்?

விடை: வாணிதாசன்

35.”தமிழ்நாட்டின் ஹாலந்து” என்று சிறப்பிக்கப்படும் ஊர் எது?

விடை: திண்டுக்கல்


Spread the love