மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
1. மைய நிர்வாகி
காலியிடங்களின் எண்ணிக்கை : 1 காலியிடங்கள்
கல்வித் தகுதி: இளங்கலை சட்டம் அல்லது முதுகலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 30,000
2. வழக்கு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1 காலியிடங்கள்
கல்வித் தகுதி : இளங்கலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 15,000
3. பல்நோக்கு மருத்துவ பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2 காலியிடங்கள்
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் : ரூ. 6,400
4. காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1 காலியிடங்கள்
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் : ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.12.2022
எவ்வாறு விண்ணப்பிப்பது?:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/12/2022120766.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
District Social Welfare Officer,
District Social Welfare Office,
Third Floor, Additional Building of Collectorate,
Madurai – 20.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/12/2022120770.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.