9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர், மாணவிகளுக்கு அரசு சிறுபான்மையினருக்கான உதவித்தொகை அளிப்பதற்கு விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.

உதவித்தொகை:
சிறுபான்மை இனத்தை சேர்ந்த முஸ்லிம், கிறிஸ்தவம், சீக்கியர், பௌத்தர், ஜெயின் மற்றும் பார்சி மதங்களை சார்ந்தவர்களுக்கு அரசு பல்வேறு வகையிலான சலுகைகளையும் அளித்து வருகிறது.
மேலும் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை திட்டங்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.
கேரளா மாநிலத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு :
தற்போது கேரளா மாநிலத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேகம் ஹஜ்ரத் மகால் தேசிய உதவித்தொகை திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
இதற்காக முந்தைய வகுப்பில் மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீதம் அல்லது அதற்கு இணையான மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.